18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

நோய்வயப்பட்ட பருமனால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள்

உடலின் எடை BMI முறையில், அதன் மதிப்பு 40-க்கு மேலே செல்லும்போது அதனை நோய்வயப்பட்ட பருமன் என்று வகைப் படுத்துகிறோம். BMI அளவு 18-க்கும், 25-ற்கும் இடையில் இருக்கவேண்டும். அதற்கு மேலே போகப்போக பல நோய்கள் வந்து சேரும். இந்த BMI அளவினை உடல் எட்டத்தொடங்குவதற்கு சற்று முன்னரே பல நோய்கள் உடலில் தோன்றத் தொடங்கிவிடும். அநேகமாக பலருக்கு  BMI அளவு 35-னை தொடும்போதே பல நோய்களின் தாக்குதல் கூட தொடங்கிவிடுகிறது.

நோய்வயப்பட்ட பருமனால் ஏற்படும் உடல் நலக்குறைபாடுகள் கீழே பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.

  • மூச்சு திணறல் – அதிக உடல் பருமன் உள்ளவர்களின் முதல் சிக்கலே இதுதான். சீரான மூச்சு விடுதல் இல்லாமல் போய்விடுகிறது. நாம் உற்று கவனித்தோம் என்றால் உடல் பருமன் உள்ளவர்கள் மூச்சு விட மிகவும் சிரமப் படுவார்கள்.
  • உறக்க மூச்சிடைநிற்பு (Sleep Apnea) – மூச்சு விடுதலே சிரமமான காரியமாக ஆகிவிட்டபடியால், சில சமயங்களில் தூக்கத்தின்போது மூச்சு விடுவதே சில வினாடிகளுக்கு நின்றுவிடும். இது தூக்கமின்மை நோயை வரவழைக்கும். இந்த செயல்பாடு நிகழும்போது பருமனானவர்களின் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதனால், தலைவலி, உயர் ரத்த அழுத்தம், போன்ற குறைபாடுகள் ஏற்படும். சில சமயங்களில் பக்கவாதாமோ, மாரடைப்போ கூட ஏற்படலாம். அப்படி ஏற்படும் பட்சத்தில் மரணம் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
  • சர்க்கரை நோய் – மிக மோசமான உடல் பருமனை உடைய பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோய் கண்டிப்பாக இருக்கும். அதுவும் இந்தியாவில் சர்க்கரை நோய் கண்டிப்பாக அவர்களுக்கு இருக்கும். இந்த நோய்வயப்பட்ட பருமன் அவர்களுக்கு ஏற்பட காரணமே அநேகமாக அதிகமான மாவுச்சத்தை உடைய குப்பை உணவுகளை உண்டதால் தான் இருக்கும். அதனால் அவர்களது கணையம் அதிகமாக வேலை செய்து செய்து மிகவும் சோர்ந்து போயிருக்கும். உடலில் சேரும் சர்க்கரை அளவை அதனால் குறைக்க முடியாத நிலையை அடைந்திருக்கும். இந்த காரணத்தினால் தான் நோய்வயப்பட்ட பருமனை உடையவர்கள் பெரும்பாலும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். சில நேரங்களில் தேவையான அளவில் இன்சுலின் சுரந்தாலும், அது செயல்படும் தன்மையை இழந்திருக்கும் (insulin resistance).
  • உயர் ரத்த அழுத்தம் – மிக மோசமான பருமனை உடையவர்களின் இதயம் இன்னும் வலுவுடன் இயங்கி பருத்த உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் அனுப்பவேண்டி இருக்கும். இதனால் ரத்த அழுத்தம் இயல்பை விட அதிகமாக இருந்தால் தான் இந்த வேலையை அதனால் செய்ய முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும். இது நீண்ட காலத்திற்கு பிறகு உடலுக்கு தீமையை தான் செய்யும்.
  • பக்கவாதம் – பக்கவாதம் என்பது உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக மூலையில் ரத்தக்கசிவு ஏற்படுவதால் வருவது.  மோசமான உடல் பருமனை உடையவர்களுக்கு இயல்பாகவே உயர் ரத்த அழுத்தம் இருப்பதால்  அதிகமாக அவர்களை எளிதில் தாக்குகிறது.
  • ரத்தத்தில் மோசமான கொழுப்பு அதிகமாக காணப்படுவது – மிக மோசமான பருமனை உடையவர்களின் ரத்தம் கண்டிப்பாக மோசமான கொழுப்புகளான டிரைகிளிசிரைடு (Triglyceride), எல்.டி.எல். (LDL) போன்றவற்றால் நிறைந்திருக்கும். இதயத்தில் மட்டும் இல்லாமல், கை கால்களை உள்ள ரத்த நாளங்களை அடைப்பதற்கும் இந்த கெட்ட கொழுப்புகள் பெரும்பங்கு வகிக்கின்றன.
  • மாரடைப்பு – ரத்தத்தில் அதிகமாக கெட்ட கொழுப்பு இருந்தால், ரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு மிக அதிகம். அவ்வாறு அடைப்பு ஏற்பட்டு ரத்தம் பாய்வது தடைபட்டால், உடல் பருமனானவர்கள் மாரடைப்பால் இறந்துவிடுவர். இதில் மோசமான விஷயம் என்னவென்றால் மாரடைப்பு ஏற்பட்டால் கொடுக்கப்படும் முதலுதவிகள் கூட உடல் பருமனானவர்களுக்கு கொடுப்பதில் மிகுந்த சிரமம் உண்டு.
  • மெட்டபாலிக் பிணிகள் (metabolic syndrome) – நோய்வயப்பட்ட பருமனை உடையவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாக இருத்தல், இப்படி எல்லாமும் இருந்தால் அதனை மெட்டபாலிக் பிணிகள் என்போம்.
  • சில வகை புற்று நோய்கள் – சில சமயங்களில் நோய்வயப்பட்ட உடல் பருமனை உடையவர்களுக்கு பருமனால் புற்று நோய் வரலாம். ஈரல், பித்தப்பை, கணையம், சிறுநீரகம், கர்பப்பை, ஆசனவாய் போன்ற உறுப்புகளில் புற்று நோய் ஏற்படலாம்.
  • செக்சில் ஈடுபாடு குறைவு – நோய்வயப்பட்ட பருமனை உடையவர்கள் பெரும்பாலானவர்களுக்கு செக்சில் ஆர்வம் குறைந்தே காணப்படும். ஏனென்றால் உடலுறவு செய்வதற்கே அவர்கள் பெரிதும் மெனக்கெட வேண்டும் என்ற காரணத்தால் ஈடுபாடு அவ்வளவாக இருக்காது. அதே நேரம், அவர்கள் உடலில் உள்ள பல அடுக்கு கொழுப்புகள், உடலுறவுக்கு தேவையான ஹார்மோன்களை சரியான இடத்திற்கு கடத்துவதில்லை. இந்த காரணத்தால் உடல் பருமனான ஆண்களுக்கு அவர்களது குறி விறைப்பு தன்மை அடையாது.
  • கருத்தரிப்பு திறன் – உடல் பருமன் ஆனாலே பலரது கருத்தரிக்கும் திறன் குறைந்துவிடுகிறது. ஆக ஒருவர் நோய்வயப்பட்ட பருமனை உடையவர்கள் என்றால் அவருக்கு குழந்தை பிறக்கும் திறன் குறைந்துவிடுகிறது. ஆண்கள் என்றால் அவரது விந்தணுக்களின் வீரியம் குறைந்துவிடுகிறது. பெண்கள் என்றால் அவர்களது மாதவிடாய் மிகவும் சிக்கலாகி நேரத்திற்கு வராது.
  • ஈரல் சம்பந்தப்பட்ட பிற நோய்கள், எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மூட்டுவலி போன்ற மற்ற நோய்களும் நோய்வயப்பட்ட பருமனை உடையவர்களுக்கு ஏற்படும் வாய்ப்பே அதிகம்.
Call Now